Posts

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை ____________________ ‌‌   வருத்தத்திலும் வறுமையிலும்  வாழும் உள்ளம் பல கோடி உண்டு  கோடிகளில் புரளும் உள்ளம்   ஒரு சில உண்டு... மழை என்றாலும் கொடிய நோய் என்றாலும்  நிலநடுக்கம் என்றாலும்  வன்முறை சம்பவங்கள் என்றாலும்  கற்பழிப்பு என்றாலும்  முதலில் பாதிப்பது வறுமையில் இருப்பவன் மட்டுமே....  அரசாங்கத்தை நிர்ணயிப்பதும் ஏழைதான்  அரசு கஜானாவை நிரப்புவதும் ஏழைதான்...  பணக்காரனை பணக்காரனாக வாழ வைப்பதும் ஏழைதான்....  ஒருவனுடைய வறுமையை தன்னுடைய ஆளுமை ஆக்கிக் கொள்ளும்  முதலாளித்துவமும் அரசியலமைப்பும் இருக்கும் வரை  ‌‌ வல்லரசு வெறும் கனவே ..    உங்களில் ஒருவன்              ‌‌  கோவூர்       ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று் ஒரு கவிதை -----------------------------------     சோகத்திலும்   சிரிப்பவன் உண்டு ....     சொர்க்கத்திலும்   வருந்துகிறவனம்      உண்டு .... மழையிலே .     நினைக்கிறவன்  மண்வாசனை .      உணர்கின்றான்....  மண்ணை விற்பவன்    பணம்  வாசனை   உணர்கின்றான்.....      வாசனை  உணர்வு   இல்லாதவனே        சன்னியாசியாய்   திரிகின்றான் ....     காலம்  என்னும் போக்கில்    காதல் மறந்து  கவிதையாய்   ஒரு பயணம் ..    உங்களில் ஒருவன்              கோவூர்        ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
தங்க தளபதியெ... ஆர்த்தெழம் பேரலை நீ அடங்கா எரிமலை நீ தாகம் தணிப்பவன் நீ தவறுகள் தடுப்பவன் நீ உணர்ச்சியின் உருவம் நீ ஒழக்கத்தின் உறைவிடம் நீ அறிவை மதிப்பவன் நீ பண்பை வளர்ப்பவன் நீ   பாருக்கு உழைப்பவன் நீ உம் வழியில் நடப்போம்.. உயர் தமிழ் வளர்ப்போம்..

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை  ---------------------------------  என்னதான் சண்டையோ இந்த  இமைகளுக்கு  விழிகள் கூட சமரசம் செய்து பார்த்தது முடியவில்லை....  இரவெல்லாம் பிரிந்து இருந்த இமைகள்  அதிகாலை இமைகள் மூடியது .... விழிகள் உறங்கியது.....  உறங்கிய விழித்திரையில் அவள் முகம் ..... அழகிய முகம்    பன்மொழி பேசும்  பவித்திர விழிகள் ... பாசம் முகம்  வான் நிலவும் ரசிக்கும் அவள் கன்னங்கள்...  பவள பல்லழகி மூன்றாம் பிறை    இதழ் அழகி .... வானவில் கழித்தழகி....  சந்தன பொட்டழகி....  சாந்த மனம் அழகி ....  சமரசப் பேச்சு அழகி....  மேகக்கூட்ட உடை அழகி ....  அவள் மார்போடு என் முகம் அணைத்துக் கொண்டாள்  அவள் உயரம் என்பதால்....  அவள் தேக சூட்டில் நான்  மெய் மறந்தேன்  கட்டிலில் இருந்து    கீழே விழுந்தேன்....  விழித்தேன் கண்டது கனவு என உணர்ந்தேன்.....  மகிழ்ச்சி கூட பல மனிதர்களுக்கு கனவில் மட்டும் தான்...  உங்களில் ஒருவன்           கோவூர்    ...

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   --------------------------------   உணர்வுகளின்  ஒருங்கிணைந்த உச்சம் காதல்....  விழிகள்  பேசிக்கொள்ளும் விசித்திர மொழி காதல்.....  தொலைவில் உள்ளவனின் அசைவுகளை இங்கு மனதில் மையப்படுத்தி கொள்வது காதல்.....  புன்னகைக்கும் இதழ் அசைவுகளில் புரிதல் கொள்வது காதல்....  சாதியால் சாவதும் காதல்.....  சாதியைச்  சாகடிப்பது காதல் ...... மதங்களை மறக்கச் செய்வதும் காதல்.....  கடல் அலைகள் விசிறி விட  வெண்ணிலாவின் மடி சாய்ந்து  நட்சத்திரங்கள் இடம் காதல் மொழி பேசி  விண்ணில் பறக்கும் உணர்வை ஏற்படுத்துவது காதல்....   கார்த்திகை திருநாளில் தீப ஒளி ஏற்றும் காதல் உள்ளங்களுக்கு இவ்வரிகள்....  உங்களில் ஒருவன்              கோவூர்     ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை ---------------------------------   மாலை நேரத்து  காற்றே....   அதிகாலை      தென்றலே....      உதயமாகும்  உதயசூாியனே....  மேக கூட்டமே... பனிபொழிவே....    உச்சி வெயிலே... இதமான மாலை             நேரத்து   சூாியனே... பௌா்ணமி நிலவே    இன்ப ஒளியே... இயற்க்கையே    அமாவாசை இரவே.... வளா்பிறையே      முழு நிலவே.... வங்க கடலே....    வசந்தம் வீசும்  இயற்க்கை தந்த     வானளாவிய   மரங்களே.....     மனம் வீசும்  மல்லிகை    தோட்டங்களே.... வன விலங்குகளே...    வான் பறவைகளே... கனிகளே....    கீரை வகைகளே காய்கறிகளே....    இயற்க்கை அன்னையே   உம்மை போற்றி.... உங்களில் ஒருவன்            கோவூா்      ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை  ---------------------------------    பூங்காற்றே நீ தென்றலாய்  வீசும் போது  ரசிக்கும்  உள்ளங்கள் தான்  நீ சூறாவளியாய் மாறும்போது பயந்துதான் போகிறது  இந்த உள்ளங்கள்   ஆழ் கடலில் தோன்றி அசைந்தாடும்   அலைகள் இடம்    காதல் மொழி பேசி கரையை கடக்கும் புயல்  காற்றே....  ஏழையின் குடிசை மட்டும் பிரித்து எடுத்து செல்லும் கல் நெஞ்சம் கொண்ட காற்றே.....  குறுக்கு வழியில் சம்பாதித்து   கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும்  கோமான்கள் இல்லங்கள் புகுந்து....  கரன்சி நோட்டுகளை உன் காற்று என்ற கரங்களால் அள்ளிவந்து ஏழைகளின் இல்லங்களில் வீசி விட்டுப் போக  உனக்கு மனமில்லையா.....  புயல்  காற்றே நீயும் ஒரு கோழை தான்  பணக்காரனின் மாளிகைக்குச் சென்றாள் உன்னால் திரும்ப முடியாது  ஏழை நடுத்தர மக்களின் இல்லங்களில் சென்றாள்  நீ வீரனாக சென்றுவிடலாம்  நீ வீரன் என்ற அடையாளத்தை ஏழைகள்தான்  கொடுக்கிறார்கள் சூறாவளி புயல் காற்றே  நிவர்  புயல் கரையைக் கடந்தாலும்...