இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை ----------------------------------- என்னவளின் மச்சம் தீண்ட வருவாயா வான் மழையே... வைகை நதியில் அசைந்தாடும் வான் நிலவே..... பொய்கை எனும் பூஞ்சோலையில் பூத்துக்குலுங்கும் மலர்களில் ஒன்று மழலையின் சிரிப்பைக் கண்டு மலரத்தான் துடிக்கிறதோ... உணவுக்கு பஞ்சம் என வாழ்கின்ற வாழ்வில் வசந்தம் தேடும் உள்ளம் தான்... பசித்தவனுக்கு தன் உணவை பகிர்ந்து கொடுக்கிறது.... நீதிமான்கள் வாழ்ந்த நாட்டில் தான் நீதி தேவதை கண்மூடி நிற்கிறது... உங்களில் ஒருவன் கோவூர் ம சுந்தரேசன்
Comments
Post a Comment